சுமார் ரூபாய் 1,112 கோடி மதிப்பிலான திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் அதிநவீன வசதிகளுடன் கூடிய இரண்டாவது புதிய முனையத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.02) காலை 11.30 மணிக்கு நேரில் திறந்து வைத்தார். புதிய முனையத்தை நேரில் பார்வையிட்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம், புதிய முனையத்தின் சிறப்பம்சங்கள் குறித்து இந்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பிரதமருக்கு விளக்கினார்.
சுங்கே உலு பாண்டன் கால்வாயில் மிதந்த சடலம் – யார் அவர்?
புதிய முனையத்தின் சிறப்பம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தில் ஒரே நேரத்தில் 3,000 பயணிகள் வருகை தரலாம். புதிதாகக் கட்டப்பட்டுள்ள முனையத்தில் 750 கார்கள், 200 டாக்சிகள், 10 பேருந்துகளை நிறுத்தும் வசதி உள்ளது. புதிய முனையத்தில் வருகை, புறப்பாடு என 16 வழிகள் உள்ளன; முனையத்தில் 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்க நவீன கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
4 நட்சத்திர புள்ளிகள் பெற்ற முதல் இந்திய விமான நிலைய முனையம் இதுவாகும். புதிய முனையத்தில் கழிவுநீரை வெளியேற்றாமல் மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கலை நுட்பங்கள் உள்ளிட்டவையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வேலையிடத்தில் மின்னல் தாக்கியதில் 3 கட்டுமான ஊழியர்கள் பாதிப்பு
இரண்டு அடுக்குகளைக் கொண்ட புதிய முனையம் பயணிகள் அனைவரையும் கவரும் வகையிலும், வியந்து பார்க்கும் வகையிலும் அமைந்துள்ளது.