சிங்கப்பூரின் புனேல் அவென்யூவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். அவருக்கு வயது 68. இவர் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டியாகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த ஜூன் 20- ஆம் தேதி திருச்சிக்கு சென்ற கிருஷ்ணன், மயிலாடுதுறையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அதைத் தொடர்ந்து, அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்தார்.
வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை தமிழகத்திற்கு கொண்டு வர ஆட்சியரிடம் மனைவி மனு!
பின்னர், தனது தமிழகப் பயணத்தை முடித்துக் கொண்டு, கடந்த ஜூன் 29- ஆம் தேதி அன்று சிங்கப்பூருக்கு செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக, அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து, விமான நிலையத்தில் இருந்த சக பயணிகள், அவரை ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுமார் 770 ஊழியர்களுக்கு வேலை இல்லை… கலங்கும் ஊழியர்கள் – Singapore Turf Club
மருத்துவமனையில் கிருஷ்ணனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், ஜூன் 30- ஆம் தேதி அன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து திருச்சி விமான நிலைய காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.