சிங்கப்பூரில் மிகவும் மலிவான கட்டணத்தில் விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது ஸ்கூட் விமான நிறுவனம். அந்த வகையில், இந்தியாவின் கோயம்புத்தூர், திருவனந்தபுரம், அமிர்தசரஸ், திருச்சி, விசாகப்பட்டினம் ஆகிய ஐந்து நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் தொடர்ந்து விமானங்களை இயக்கி வருகிறது ஸ்கூட் ஏர்லைன்ஸ் (Scoot Airlines) நிறுவனம். இந்த விமான சேவை முழுவதும் ‘Non-VTL’ விமான சேவை ஆகும்.
குறிப்பாக, தமிழகத்தில் கோவை மற்றும் திருச்சி ஆகிய இரு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவையை வழங்கி வருகிறது ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம்.
இந்த நிலையில், திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையேயான விமான சேவையில் ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது ஸ்கூட் ஏர்லைன்ஸ். முதலில் ஏப்ரல் மாதத்தின் பயண அட்டவணைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
காபி கடையில் சண்டை: 26 வயது ஆடவர் போலீசில் சிக்கினார் – ஒருவர் மருத்துவனையில் அனுமதி
அதன்படி, திருச்சி, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் வரும் ஏப்ரல் மாதத்தில் 1, 3, 4, 5, 7, 8, 10, 11, 12, 14, 15, 17, 18, 19, 21, 22, 24, 25, 26, 28, 29 ஆகிய தேதிகளில் விமானங்கள் இயக்கப்படுகிறது. பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண நேர அட்டவணை தொடர்பான மேலும் விவரங்களுக்கு ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் https://www.flyscoot.com/en/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதால், முன்பதிவு விறுவிறுப்பு அடைந்துள்ளது.