திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து நேரடி மற்றும் தினசரி விமான சேவைகளை வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express). இந்த வழித்தட விமான சேவையை சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் அதிகளவில் பயன்படுத்தி வருவதால், பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்: ஜோகூர் சுல்தான் அளித்த விருந்தில் பங்கேற்ற சிங்கப்பூர் தலைவர்கள்!
குறிப்பாக, மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு வேகமாக நடைபெற்று வருகிறது. விமான பயண டிக்கெட் முன்பதிவு, விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/home என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.