திருச்சி, சிங்கப்பூர் இடையே ‘ஸ்கூட்’ நிறுவனத்தின் நேரடி விமான சேவை- மே, ஜூன் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

பயணப்பைகளை எடுத்துவர முடியாமல் தவித்த ஸ்கூட் பயணிகள்: இந்தியாவில் தரையிறங்கியது - கடும் வெப்பம் தான் காரணம்
Photo: FlyScoot

இந்தியாவின் திருச்சி, விசாகப்பட்டினம், அமிர்தசரஸ், கோவை, திருவனந்தபுரம், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் ஸ்கூட் நிறுவனம் (Flyscoot) தொடர்ந்து விமான சேவையை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமாக சிங்கப்பூருக்கு கடத்தப்பட்ட மலைப்பாம்புகள் – மலேசிய லாரி ஓட்டுனரிடம் விசாரணை

குறிப்பாக, திருச்சி, சிங்கப்பூர் இடையே தினசரி விமான சேவையை ஸ்கூட் நிறுவனம் வழங்கி வருகிறது. இது நேரடி விமான சேவை ஆகும். ஸ்கூட் நிறுவனத்திற்கு சொந்தமான A321neo என்ற விமானத்தை இயக்கி வருகிறது.

இவ்வழித்தடத்தில் விமான சேவைக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது கோடைக்காலம் என்பதாலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், தங்கள் குடும்பத்தினருடன் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு செல்ல பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. அதனால் தான் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பு அடைந்துள்ளதாக தகவல் கூறுகின்றன.

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ நிறுவனத்தின் தினசரி விமான சேவை- மே, ஜூன் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

பயண டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en/ என்ற ஸ்கூட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.