‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவை’- டிசம்பர் வரையிலான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

scoot-flight-diverted
Photo:Facebook/flyscoot
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ஸ்கூட் விமான நிறுவனம் (Flyscoot), திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே தினசரி இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது.
இந்த வழித்தடத்தில் A321neo என்ற விமானத்தை இயக்கி வருகிறது. இந்த விமானத்தில் மொத்தம் 236 இருக்கைகள் உள்ளது. இதனால் அதிகளவில் பயணிகள் இந்த விமானத்தில் பயணிக்க முடியும்.
தற்போது வரை திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே தினசரி ஒரு விமான சேவையை வழங்கி வரும் ஸ்கூட் நிறுவனம், அக்டோபர் 31- ஆம் தேதி முதல் கூடுதல் விமான சேவையாக சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு மேலும் ஒரு விமான சேவையை வழங்க உள்ளது. இதற்கான விமான பயண டிக்கெட் முன்பதிவும் நடைபெற்று வருகிறது.
அதேபோல், திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையேயான விமான சேவைக்கான நடப்பாண்டு டிசம்பர் மாதம் வரையிலான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விமான பயண டிக்கெட் முன்பதிவு, விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en/ என்ற ஸ்கூட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.