“திருச்சி, சிங்கப்பூர் இடையேயான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை”- ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Indigo Airlines

 

இந்தியாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை வழங்கி வரும் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்று இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் (Indigo Airlines). இந்த விமான நிறுவனம், திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து நேரடி (Non- Stop) மற்றும் கனெக்ட் விமான சேவைகளை (Connect Flight Service) வழங்கி வருகிறது.

மலேசியாவில் உலகத் தமிழ் மாநாடு- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு!

குறிப்பாக, திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே தினசரி மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட விமான சேவைகளை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்த வழித்தட விமான சேவைக்கான ஜூலை முதல் செப்டம்பர் மாதங்கள் வரையிலான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.goindigo.in/ என்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளர்ப்பு மகளை வன்கொடுமைச் செய்த தந்தைக்கு சிறை!

எனினும், திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கு 38,000 முதல் 43,000 வரை பயணக் கட்டணமாக, இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் நிர்ணயித்துள்ளது.