திருச்சி, சிங்கப்பூர் இடையே ‘ஸ்ரீலங்கன்’ ஏர்லைன்ஸ் விமான சேவை- மே மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Sri Lankan

திருச்சி, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் (SriLankan Airlines) தொடர்ந்து விமான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த விமான சேவையானது நேரடி விமான சேவை இல்லை. கொழும்பு வழியாக விமான சேவையை விமான நிறுவனம் வழங்கி வருகிறது.

சிறந்த ஊதியம் மற்றும் வேலை வாய்ப்புடன் சிங்கப்பூர் விமானத்துறையில் வாய்ப்பு – Ng

எனினும், தினசரி விமான சேவை இல்லை. கொழும்பு வழியாக சிங்கப்பூருக்கும், திருச்சிக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமைகளில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை, வியாழன்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான சேவைக்கு ஏர்பஸ் A330-300 என்ற விமானம் இயக்கப்படுகிறது.

“தமிழ் மக்களுக்கு பண்ணாம வேற யாருக்கு பண்ணப்போற?”.. சிங்கப்பூர் வாழ் தமிழ்ப் பெண்ணின் நெகிழ வைக்கும் செயல் – தமிழக அரசு பாராட்டு!

இந்த வழித்தட விமான சேவைக்கான மே மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விமான பயண டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.srilankan.com/en_uk/in என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.