“திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை”- மே வரையிலான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Air India Express Official Twitter Page

 

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கும் இடையே இருமார்க்கத்திலும் நேரடி விமான சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. குறிப்பாக, இந்த வழித்தடத்தில் தினசரி விமான சேவைகளை விமான நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்த இரு நாடுகள் இடையே அந்நாட்டு மக்கள் பயணிக்க இனி விசா தேவையில்லை

திருச்சி, சிங்கப்பூர் வழித்தடத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைக்கான பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் வரையிலான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோடைக்காலம் நெருங்கியுள்ளதால், ஏப்ரல், மே மாதங்களுக்கு தற்போதில் இருந்தே விமான பயண டிக்கெட் முன்பதிவுத் தொடங்கியுள்ளதாக சுற்றுலா அழைத்துச் செல்லும் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

உலகின் ஊழல் இல்லா நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் 5வது இடம் – “சிங்கப்பூர் என்றால் சிறப்பு”

விமான பயண டிக்கெட் முன்பதிவு, விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் https://www.airindiaexpress.com/home என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.