சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வர வேண்டிய விமானம் தாமதமாக வந்தடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரவு பத்து மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து வரும் ஸ்கூட் விமானம், நேற்று முன்தினம் தாமதமாக 11.45 மணிக்கு வந்துள்ளது.
சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியருக்கு காவல்துறை சிறப்பு விருது – எதற்கு தெரியுமா?
அதோடு மட்டுமல்லாமல், மலேசியாவில் இருந்து வரும் ஏர் ஏசியா விமானமும் இரவு 10 மணிக்கு பதிலாக நள்ளிரவு 12.25 மணிக்கும் திருச்சி வந்தடைந்தது.
அதே போன்று, சென்னையில் இருந்து திருச்சி வரும் இண்டிகோ விமானமும் தாமதமாக வந்தடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு தொழில்நுட்பக் கோளாறு தான் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் கடும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.
“நிர்வாண வீடியோக்களை ஆன்லைனில் போட்டுவிடுவேன்” பெண்ணுக்கு மிரட்டல் – ஆடவருக்கு சிறை