திருச்சியில் இருந்து சிங்கப்பூர் வழியாக பாலிக்கு விமான சேவையை வழங்கி வரும் ஸ்கூட் நிறுவனம்!

scoot-flight-diverted
Photo:Facebook/flyscoot

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ஸ்கூட் விமான நிறுவனம் (FlyScoot), திருச்சியில் இருந்து சிங்கப்பூர் வழியாக இந்தோனேசிய நாட்டின் பிரபல சுற்றுலா தலமான பாலிக்கு தினசரி விமான சேவையை வழங்கி வருகிறது. இந்த வழித்தட விமான சேவை குறித்து விரிவாகப் பார்ப்போம்.

போலீஸ் அதிகாரி கையோடு சேர்த்து கண்ணாடியை இறக்கிவிட்டு டாக்ஸியை இயக்கிய ஓட்டுநர் கைது

திருச்சி மற்றும் பாலி இடையே சிங்கப்பூர் வழியாக இரு மார்க்கத்திலும் தினசரி இரண்டுக்கும் மேற்பட்ட விமான சேவைகளை ஸ்கூட் விமான நிறுவனம் தொடர்ந்து வழங்கி வருகிறது. திருச்சியில் இருந்து பாலி செல்வதற்கு ஆரம்பக் கட்டணமாக 14,823 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் வழியாக ஸ்கூட் விமான நிறுவனம், விமான சேவையை வழங்கி வருவதால், திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல விரும்பும் பயணிகளுக்கும், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வர விரும்பும் பயணிகளுக்கும் மிகுந்த பயனுள்ளதாக உள்ளது.

XBB Omicron வேரியன்ட் வைரஸ் கடுமையானதென வாட்ஸ்அப் மூலம் பரவும் வதந்திகள் தவறானவை : சுகாதார அமைச்சகம் !

திருச்சி மற்றும் பாலி இடையேயான விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விமான சேவை மற்றும் விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en/ என்ற ஸ்கூட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.