திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ நிறுவனத்தின் தினசரி விமான சேவை- மே, ஜூன் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Air India Express Official Twitter Page

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் விமான சேவையை வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம். குறிப்பாக, திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து விமான சேவையை வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்.

கட்டிட பராமரிப்பு பணியின்போது 16வது மாடியில் இருந்து 9வது மாடிக்கு விழுந்த ஊழியர் சம்பவ இடத்திலேயே மரணம்

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி விமான சேவையை வழங்கி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வாரத்தில் செவ்வாய்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் விமான சேவையை வழங்கி வருகிறது.

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு IX 689, IX 681, IX 685 என்ற விமானங்களும், திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு IX 682 என்ற விமானமும் இயக்கப்பட்டு வருகிறது.

வெளிநாட்டு ஊழியர் வறுமையில் இருந்தபோது S$1,000 கொடுத்து உதவிய சிங்கப்பூர் பெண்மணி – 11 ஆண்டுகள் கடந்தும் பெண்மணியை தேடிவரும் ஊழியர்!

இந்த வழித்தடத்தில் விமான பயணச் சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பயண டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.