புக்கிட் திமா விரைவு சாலையில் டிரக் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் வாகனத்தில் சிக்கிக்கொண்டார்.
கடந்த ஜனவரி 25 அன்று ஏற்பட்ட விபத்தில், இருவருக்கு காயங்கள் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கவிழ்ந்த டிரக் வாகனம், புக்கிட் பஞ்சாங் வெளியேறும் பாதையில் போக்குவரத்துக்கு தடையாக இருந்ததாக நேரில் கண்ட ஒருவர் கூறினார்.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவர் சென்ற பேருந்து 10 நிமிடம் சாலையில் காத்திருந்ததாகவும் அவர் சொன்னார்.
சிக்கிய டிரக் ஓட்டுநரை மீட்க, சாலையில் இருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் ஊழியர் இருவர் உதவியதாகவும் கூறப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் டிரக்கின் கதவைத் திறக்க முயற்சிப்பதையும் படத்தில் காணப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF), விபத்தில் சிக்கிய இரண்டு பேருக்கும் தேவையான உதவிகளை செய்தது.
அவர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாக கூறிய SCDF, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மறுத்துவிட்டது.