துவாஸ் சோதனைச் சாவடி கவுன்டர்களில் வருகை அனுமதி நடைமுறையைத் தவிர்க்க முயன்றபோது வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகள் மீது இன்று சனிக்கிழமை (ஏப். 9) மாநில நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்தது, இதில் மலேசியப் பதிவு பெற்ற காரை ஓட்டிச் சென்ற சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த தியோ தியாம் லெங் (46) என்பவர் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
துவாஸ் சோதனைச் சாவடியின் மோட்டார் சைக்கிள் வருகை பகுதியில் தனது வாகனத்தை பின்னோக்கி ஓட்டி, குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரியை தாக்கி காயம் ஏற்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அதோடு மட்டுமல்லாமல், 2016ஆம் ஆண்டு சிங்கப்பூரில் 33 கிராம் methamphetamine போதைப்பொருள் இறக்குமதி செய்ய உதவியதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இரண்டு பயணிகள்
ஒருவர் 35 வயதான சீன நாட்டவர் சென் சோங்கிங் மற்றும் மற்றொருவர் 31 வயதான வியட்நாம் நாட்டவர் ஹோ தி மை நங்.
அவர்கள் மீது குற்றவியல் தொடர்பாக அத்துமீறல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
பூன் லே டிரைவ் ஆயுதம் ஏந்திய தாக்குதல்: சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக நபர்கள்