வெவ்வேறு இடங்களில் இருவரின் சடலம் கண்டெடுப்பு – போலீஸ் விசாரணை

dead found spore
Shin Min Daily News

சிங்கப்பூரில் கடந்த செப்.12 செவ்வாய்கிழமை அன்று இருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் 62 வயதான பெண், இவர் செம்பவாங்கில் உள்ள கான்பெர்ரா லிங்கில் தனியாக வசித்து வந்தார்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் கூட்ட நேரிசல்? – புதிய ஊழியர்களை எங்கே தங்க வைப்பது… அவகாசம் கேட்கும் MOM

ஆசிரியையாகப் பணிபுரிந்த அவர், ஆண்டு இறுதியில் ஓய்வு பெறவிருந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

கடந்த செப். 12ம் தேதி குடும்பத்தினர் அவரைத் தொடர்பு கொண்டபோது பதில் இல்லை, சந்தேகம் அடைந்த அவர்கள் இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர்.

பின்னர் அங்கு சென்று பார்த்தபோது, அவர் தூக்கத்திலேயே இறந்துவிட்டதாகக் கண்டறியப்பட்டது.

அதே நாளில், புக்கிட் மேராவில் உள்ள கிம் தியான் பிளேஸில் உள்ள வீட்டில் 70 வயது முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.

சில நாட்களாக அவர் வீட்டில் இருந்து அழுகிய துர்நாற்றம் வந்ததாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

10வது மாடியில் அவர் வீடு இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது, பின்னர் அங்கிருந்து அவர் உடல் மீட்கப்பட்டது.

இரண்டு சம்பவங்களிலும் எந்த தவறும் நடந்ததாக சந்தேகிக்கவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகளின் வேலைகள் குறைவு