வெளிநாடுகளில் இருந்து நேற்று (ஜூலை 17) சிங்கப்பூருக்கு வந்தவர்களில் மூவருக்கு COVID-19 நோய்த்தொற்று இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் 52 வயதான சிங்கப்பூரை சேர்ந்த ஒருவரும், இந்தியாவிலிருந்து வந்த இரண்டு குழந்தைகளும் ஆகும்.
இவர்கள் மூவரும் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும் போது COVID-19 பரிசோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் 327 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 315 பேர் தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தங்கும் விடுதிகளில் மட்டும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,719ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.