சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற ஐந்து பேர் கைது.!

unlawful entry fivemen arrested
Pic: Singapore Police Force

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற சந்தேகத்தில், ஐந்து நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

துவாஸ் கடல் எல்லைக்கு அப்பால் நேற்று (24-06-2021) அதிகாலை 4.45 மணி அளவில் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது அவர்கள் பிடிபட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடலோரக் காவல்படையினர், கண்காணிப்புக் கருவிகள் மூலம் அவர்களை அடையாளம் கண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவரும் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் – பிரதமர் திரு. லீ வேண்டுகோள்.!

கைது செய்யப்பட்டுள்ள ஐந்து நபர்கள், Lube Park படகுத்துறை நோக்கி நீந்திச் சென்றதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்துமாறு குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்திடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குடிநுழைவு சட்டத்தின் கீழ், சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்தால் 6 மாதம் வரை  சிறைத்தண்டனையும் குறைந்தது 3 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.