சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற சந்தேகத்தில், ஐந்து நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
துவாஸ் கடல் எல்லைக்கு அப்பால் நேற்று (24-06-2021) அதிகாலை 4.45 மணி அளவில் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது அவர்கள் பிடிபட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடலோரக் காவல்படையினர், கண்காணிப்புக் கருவிகள் மூலம் அவர்களை அடையாளம் கண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவரும் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் – பிரதமர் திரு. லீ வேண்டுகோள்.!
WATCH: Five suspects swimming towards the shore of Lube Park Jetty in Tuas, as seen in footage from the Police Coast Guard's surveillance system. The men were arrested for unlawful entry
(Video: Singapore Police Force) pic.twitter.com/Ubj7zPCMMg— CNA (@ChannelNewsAsia) June 24, 2021
கைது செய்யப்பட்டுள்ள ஐந்து நபர்கள், Lube Park படகுத்துறை நோக்கி நீந்திச் சென்றதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்துமாறு குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்திடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குடிநுழைவு சட்டத்தின் கீழ், சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்தால் 6 மாதம் வரை சிறைத்தண்டனையும் குறைந்தது 3 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.