அனைவரும் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் – பிரதமர் திரு. லீ வேண்டுகோள்.!

Pmlee congrats govt officers
PHOTO: MCI

சிங்கப்பூரர்கள் அனைவரும் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என பிரதமர் திரு. லீ சியென் லூங் கேட்டுக்கொண்டுள்ளார்.

தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் மக்கள் COVID-19 தொற்றால் பாதிக்கப்படும் சாத்தியத்தை குறைக்க முடியும் என்றும், கிருமித்தொற்றால் ஏற்படும் கடுமையான பாதிப்புகளை மக்கள் தவிர்க்கமுடியும் என்றும் திரு லீ கூறியுள்ளார்.

வியட்நாம் தலைவர்களைச் சந்தித்த சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்!

மேலும், கொரோனா வைரஸ் கிருமித்தொற்றை சிங்கப்பூரால் முழுவதுமாக அழிக்க முடியாவிட்டாலும், அதனை சளிக்காய்ச்சலைப் போல சமாளிக்க தடுப்பூசி உதவும் என பிரதமர் திரு லீ தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் தேசிய தினத்துக்குள், COVID-19 தடுப்பூசி திட்டத்தின் இலக்கை அடைய அனைவரும் பங்காற்றுமாறு முகநூல் பதிவில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார், மகிழ்ச்சியோடும், பெருமையோடும் சிங்கப்பூர் தேசிய தினத்தை கொண்டாடுவதற்கு இது உதவும் என திரு லீ குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் இலவச Oximeter கருவி – Temasek நிறுவனம் அறிவிப்பு.!