சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் இலவச Oximeter கருவி – Temasek நிறுவனம் அறிவிப்பு.!

Temasek Foundation

சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும், Oximeter ரத்தத்தின் உயிர்வாயு அளவை பரிசோதிக்கும் கருவி இலவசமாக வழங்கப்பட உள்ளதாக Temasek நிறுவனம் முகநூலில் தெரிவித்துள்ளது.

அடிக்கடி ரத்தத்தின் உயிர்வாயு அளவை சோதிப்பதன் மூலம் நமது இயல்பான ரத்த உயிர்வாயு அளவு என்னவென்று தெரியவரும் என்றும், இது அபாயகரமான அளவுக்கு குறைந்தால், உடனடியாக மருத்துவ சிகிச்சையை நாடலாம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

காதலியைத் தாக்கிய காதலருக்கு இரண்டு மாத சிறைத்தண்டனை!

சிங்கப்பூரில் வருகின்ற ஜூலை மாதம் 3ம் தேதிக்குள், வீட்டிற்கு ஒரு Stay Prepared தாள் அனுப்பப்படும் என Temasek நிறுவனம் கூறியுள்ளது.

பின்னர், அதனை காட்டி, ஜூலை 5ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட பேரங்காடிகள் மற்றும் மருந்தகங்களில் oximeter கருவியை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

வீட்டில் பதுக்கி வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள்!