அப்பர் புக்கிட் தீமா சாலையில் நேற்று (ஏப்ரல் 24) லாரி ஒன்று விபத்துக்குள்ளானதில் 10 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
35 வயதான லாரி ஓட்டுநரும், 26 முதல் 50 வயதுக்குட்பட்ட ஒன்பது பயணிகளும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதிக அளவில் சிங்கப்பூர் பெண்களை மணக்கும் வெளிநாட்டு ஆடவர்கள்!
அந்த 10 பேரும் இங் டெங் ஃபாங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விபத்து குறித்து அன்று காலை 7.20 மணியளவில் தகவல் கொடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.
நான்கு நாட்களுக்குப் முன்பு, பான் தீவு அதிவேக நெடுஞ்சாலையில் வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று டிப்பர் லாரி மீது மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர், 15 பேர் காயமடைந்தனர். அதை தொடர்ந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பெடோக் நார்த் 7வது மாடியில் தீ: சமையலறை விளிம்பில் 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி