அப்பர் சிராங்கூனில் உள்ள கால்வாயில் இளைஞரின் சடலம் மீட்பு

21-year-old man found dead in canal at Upper Serangoon
(Screengrab: Google Maps)

அப்பர் சிராங்கூனில் உள்ள கால்வாயில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 28) 21 வயது இளைஞன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

அதிகாலை 5.45 மணியளவில் அப்பர் சிராங்கூன் சாலை மற்றும் புவாங்காக் டிரைவ் சந்திப்புக்கு இடையே உள்ள கால்வாயில் மீட்பு உதவி வேண்டி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்துள்ளது.

பெடோக்கில் சண்டையில் ஈடுபட்ட 10 நபர்கள் – 5 பேர் கைது

SCDF அதிகாரிகள் கால்வாய்க்கு வந்தபோது அந்த இளைஞர் காணப்படவில்லை. பின்னர், பேரிடர் உதவி மீட்புக் குழுவில் இருந்து இரண்டு முக்குளிப்பாளர்கள் நீருக்கடியில் தேடுவதற்கு அனுப்பப்பட்டனர்.

சோனார்-இமேஜிங் கருவிகளைப் பயன்படுத்தி நீருக்கடியில் நிலப்பரப்பை காண, தலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் வாகனத்தையும் அவர்கள் பயன்படுத்தினர்.

பின்னர் அவர்கள் இளைஞரின் உடலை கரையிலிருந்து 6மீ தொலைவில், சுமார் 2மீ ஆழத்தில் மீட்டனர். அவர் சம்பவ இடத்தில் இறந்ததாக உறுதிசெய்யப்பட்டார்.

ஆரம்ப கட்ட விசாரணைகளில், இந்த சம்பவத்தில் சதிச் செயல் ஏதும் சந்தேகிக்கபடவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இயற்கைக்கு மாறான மரணம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

ஜுராங் வெஸ்ட்டில் நிறுத்தப்பட்ட பேருந்தை தாக்காமல் இருக்க மரத்தில் மோதி தலைகீழாக புரண்ட கார்!