சிங்கப்பூரில் ஐந்து முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கோவிட்-19 தடுப்பூசி சோதனை அடுத்த வாரத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் சுமார் 150 குழந்தைகள் கலந்துகொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக CNA தெரிவித்துள்ளது.
விழிப்புடன் இருந்தாலும் இப்படியும் நீங்கள் மோசடி செய்யப்படலாம் – இந்திய ஊழியர்கள் உஷார்
கடந்த நவம்பர் 16 அன்று முதலில் KK பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் (KKH) இதுகுறித்து அறிவிக்கப்பட்டது.
KKH தனது பேஸ்புக் பக்கத்தில் சோதனையை அறிவித்த மூன்று நாட்களுக்குப் பிறகு, கடந்த நவம்பர் 19 அன்று முன்பதிவுகள் மூடப்பட்டன.
அந்த பதிவில் தடுப்பூசி சோதனைக்கு பொருந்தும் விண்ணப்பதாரர்களுக்கான சில அடிப்படை அளவுகோல்களை KKH கோடிட்டுக் காட்டியது.
அடிப்படை அளவுகோல்கள்
அதாவது அவர்கள் ஐந்து முதல் 11 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இதற்கு முன் கோவிட்-19 தொற்று பாதிக்காத குழந்தையாக இருக்க வேண்டும்.
நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களாக இருக்கக்கூடாது அல்லது கடுமையான நோய்களைக் கொண்டிருக்கக்கூடாது.
இருப்பினும், ஆஸ்துமா மற்றும் அரிக்கும் தோலழற்சி போன்ற லேசான நோய் உள்ளவர்கள் இப்போது வரை தகுதி பெறுகின்றனர்.
சிங்கப்பூர் தெருக்களில் கிடக்கும் குப்பைகளை இரண்டு குழந்தைகளுடன் சுத்தம் செய்த பெண்!