டிச.29 முதல் விசாகப்பட்டினம், சிங்கப்பூர் இடையே விமான சேவை- ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு!

scoot-flight-diverted
Photo:Facebook/flyscoot

சிங்கப்பூரில் உள்ள விமான நிறுவனங்களில் மிகக்குறைந்த கட்டணத்தில் சர்வதேச விமான சேவை வழங்கி வரும் நிறுவனம் ஸ்கூட் ஏர்லைன்ஸ் (Scoot Airlines). இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) நிறுவனம் ஆகும்.

சிங்கப்பூர் அனுப்பிய மருத்துவப் பொருட்களைப் பெற்றுக் கொண்ட ஃபிஜி!

ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விசாகப்பட்டினம், சிங்கப்பூர் இடையேயான விமான சேவை வரும் டிசம்பர் 29 முதல் தொடங்குகிறது. இதற்கான விமான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து வாரத்திற்கு மூன்று முறை விமானம் இயக்கப்படும். இரு மார்க்கத்திலும் விமானங்கள் இயக்கப்படும்.

வரும் டிசம்பர் 29- ஆம் தேதி அன்று விசாகப்பட்டினத்தில் இருந்து சிங்கப்பூருக்கு இயக்கப்படும் விமானத்திற்கான டிக்கெட் விலை இந்திய மதிப்பில் ரூபாய் 8,644.37 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இரவு 11.00 PM மணிக்கு புறப்படும் விமானம், மறுநாள் (டிசம்பர் 30) காலை 05.40 AM மணிக்கு சிங்கப்பூரைச் சென்றடையும். விமான பயண நேரம் இந்திய நேரப்படி 4 மணி நேரம் 10 நிமிடங்கள் ஆகும்.

சிங்கப்பூரில் கலாம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த நபர்!

விமான டிக்கெட் முன்பதிவு, விமான சேவை தொடர்பான பயண அட்டவணை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் https://makeabooking.flyscoot.com/?culture=en-SG என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று அறிந்துக் கொள்ளலாம்.” இவ்வாறு ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.