சிங்கப்பூரில் வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலை அடுத்த 2 வாரங்களுக்கு தொடரும்..!

மே மாதத்தின் இரண்டாம் பாதியில் வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை (மே 15) தெரிவித்துள்ளது.

மேலும் பெரும்பாலான நாட்களில் தினசரி வெப்பநிலை 26 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும், சில நாட்களில் சுமார் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் இரண்டாவது முறையாக குணமடைந்தோர் எண்ணிக்கை 1000-ஐ கடந்தது..!

கூடுதலாக சில இரவு நேரங்களில், சுமார் 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையையும் எதிர்பார்க்கலாம் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

மே மாதத்தின் பிற்பகுதியில், குறுகிய கால மிதமான மழை பெய்யும் என்றும் மேலும் கடுமையான இடியுடன் கூடிய மழை காலையிலும் பிற்பகலிலும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த மழை ஒரு சில நாட்களில் மாலை வரை நீடிக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் தமிழர்களுக்கு சிறப்பு விமானம் குறித்து சன் நியூஸ் சிறப்பு தொகுப்பு..!