சிங்கப்பூரின் அக்டோபர் மாதம் முதல் இரண்டு வாரங்களுக்கு சில பகுதிகளில் காலை முதல் பிற்பகல் வரை இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.
நிலப்பரப்புகளின் மீது நிலவும் பகல்நேர வெப்பம் காரணமாக இந்த மழை ஏற்படும் என்று வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் டோட்டோ: பிரம்மாண்ட முதல் பரிசு S$13 மில்லியனை தட்டிதூக்கிய ஒரே ஒரு டிக்கெட்!
ஒன்று அல்லது இரண்டு நாட்களில் மிதமானது முதல் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் முதல் பாதியில் மழையின் அளவு, தீவின் பெரும்பாலான பகுதிகளில் சராசரிக்கும் குறைவான அளவில் பெய்யலாம்.
பெரும்பாலான நாட்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் அதே வேளையில், பெரும்பாலான நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 33°C முதல் 34°C வரை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒன்று அல்லது இரண்டு நாட்களில், தினசரி அதிகபட்ச வெப்பநிலையானது 34°C க்கு சற்று அதிகமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.