தங்கும் விடுதி ஒன்றில் 24 வெளிநாட்டு ஊழியர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டிருக்கலாம்

(Photo: Ooi Boon Keong/TODAY)

வெஸ்ட்லைட் உட்லேண்ட்ஸ் தங்கும் விடுதியில் வசிக்கும் 5 பேருக்கு மீண்டும் கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என்று கிருமித்தொற்றுக்கான சிறப்பு சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அவர்கள் ஐந்து பேரும் கிருமித்தொற்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் ஒரே அறையில் தங்கியிருந்தனர்.

தடுப்பூசிக்கும், பின்னர் ஆடவருக்கு ஏற்பட்ட பக்கவாதத்திற்கும் தொடர்பும் இல்லை…

மீண்டும் பாதிக்கப்பட்ட ஐந்து பேரில் 2 பேர், கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி பங்களாதேஷிலிருந்து இங்கு வந்தனர் என்று MOH தெரிவித்துள்ளது.

தொற்றுநோயியல் தொடர்பான விசாரணைகளில், வெளிநாட்டில் இருக்கும்போது அவர்களுக்கு தொற்றுநோய் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

கூடுதல் விசாரணைகள் அவர்களின் வேலையிடத்தில் நடந்து வருகின்றன என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

வெஸ்ட்லைட் உட்லேண்ட்ஸ் தங்கும் விடுதியில் கண்டறியப்பட்ட 24 குணமடைந்த வெளிநாட்டு ஊழியர்களில் இந்த ஐந்து பேரும் ஒரு பகுதியாக உள்ளனர்.

இவர்களுக்கு மீண்டும் கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும் MOH தெரிவித்துள்ளது.

அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு தொற்று நோய்களுக்கான தேசிய நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக MOH தெரிவித்துள்ளது.

தங்கும் விடுதியில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர் – விவரம்