சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த ஊழியர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்தவர் 35 வயதுமிக்க ராஜா மோகன். இவர் மீது வழக்கு நிலுவையில் இருந்துள்ளது.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பெண்… நாசம் செய்த வெளிநாட்டு ஊழியர் – சிறை தண்டனை விதிப்பு
இவரின் மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இவர் மீது வரதட்சணை தொடர்பாக கொடுமை செய்வதாக நெல்லூர் போலீசிடம் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து, போலீசில் இருந்து தப்பிய ராஜா சிங்கப்பூர் வந்து பணிபுரிந்துள்ளார். தொடர்ந்து தலைமறைவான அவரை போலீசார் தேடி வந்துள்ளனர்.
அவர் லுக் அவுட் குற்றவாளி என விமான நிலையங்களில் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த அவர் வசமாக போலீசிடம் சிக்கினார்.
அவரை பிடித்த அதிகாரிகள், நெல்லூர் போலீசாரிடம் தகவல் கொடுத்து அழைத்து செல்லுமாறு தகவல் கொடுத்துள்ளனர்.