கோபத்தில் கணவரை கத்தியால் குத்திய மனைவிக்கு சிறைத் தண்டனை!

Photo: Getty

2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2ம் தேதி கணவன் மற்றும் மனைவிக்கு இடையே நடந்த வாக்குவாதத்தில் கோபமடைந்த மனைவி, கணவனை கத்தியால் நெஞ்சில் குத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

சிங்கப்பூரில் தாங்கமுடியாத அளவுக்கு வெப்பம் வாட்டுகிறதா? இதோ நல்ல செய்தி

தன்னுடைய கணவன் தனக்கு துரோகம் செய்துவிட்டு வேறுபெண்ணுடன் தொடர்பில் இருந்ததை அறிந்த மனைவி, கோபமடைந்து கணவருடன் வாக்குவாதம் செய்தார்.

சிறிது நேரத்தில் கணவனும் மனைவியும் ஒருவர் மற்றொருவரை தாக்கிக் கொள்ளும் அளவிற்கு சண்டையிட்டுக் கொண்டனர்.

ஒரு கட்டத்தில் கோபம் அதிகரிக்க, மனைவி கத்தியை எடுத்து தன் கணவரின் நெஞ்சிலேயே ஆக்ராேஷத்துடன் குத்தினார். அருகாமையில் இருப்பவர்கள் போலிஸை அழைக்க, சம்பவ இடத்திற்கு போலிஸார் விரைந்து வந்தனர்.

போலிஸ் அதிகாரிகள் வந்த பிறகும், கணவன் மனைவியின் சண்டை நிற்கவில்லை. இரத்தம் சொட்ட சொட்ட கணவனும், கடும் கோபத்தில் கையில் கத்தியுடன் மனைவியும் நின்றுக் கொண்டிருந்தனர். போலிஸ் அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர்.

குழந்தையை மோசமாக நடத்துதல், கொடுரமாக கொலை செய்யும் அளவிற்கு தாக்குதல் போன்ற குற்றங்களுக்காக ஏற்கனவே கணவருக்கு 9 மாதச் சிறையும், S$4500 விதிக்கப்பட்டது.

தற்போது நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், கத்தியால் குத்திய மனைவிக்கு 8 மாதம் மற்றும் 3 வாரத்திற்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது குடும்பப் பிரச்சினை என்பதால், இதில் சம்பந்தப்பட்டவர்களுடைய குழந்தையின் எதிர்காலத்தைக் கருதி நீதிமன்றம் கணவன், மனைவியின் பெயர் மற்றும் இதர தகவல்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிறந்தநாளைப்போல தனது இறுதிச் சடங்கிற்கும் ஏற்பாடு செய்த பெண் – 200 லாட்டரி டிக்கட்டுகளை வழங்கினார்