மனைவிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து மாறி மாறி நாசம்… ஆன்லைனில் செயல்பட்ட குழு – 4 பேருக்கு சிறை

வாடகை வாகனத்தில் ஒன்றாக வந்த ஆடவருடன் வாக்குவாதத்தில்

மனைவிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து மாறி மாறி பலாத்காரம் செய்த நான்கு பேருக்கு நேற்று (நவம்பர் 16) சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இணையங்களில் மனைவியைப் பகிர்ந்து கொள்ளுவது பற்றி கலந்துபேசும் குழுவில் ஈடுபட்டுள்ள மொத்தம் ஏழு ஆண்களில் அவர்கள் நால்வரும் அடங்குவர்.

சிங்கப்பூரில் வரும் நாட்களின் மழை அளவு குறைவாக இருக்கும்

K என்று குறிப்பிடப்பட்டுள்ள 44 வயதுமிக்க ஆடவருக்கு, 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 20 பிரம்படிகள் விதிக்கப்பட்டது. இவருக்கு திருமணமாகி குழந்தை இல்லை.

L என்று குறிப்பிடப்பட்டுள்ள 53 வயதுமிக்க ஆடவருக்கு, 13 ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன.

M என்று குறிப்பிடப்பட்டுள்ள 45 வயதுமிக்க ஆடவருக்கு, 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 20 பிரம்படிகள் விதிக்கப்பட்டது. இவருக்கும் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன. மனைவியுடன் மூன்று குழந்தைகள் இருந்தனர், இவர் தன் மனைவியை கற்பழிக்க அனுமதி வழங்கியவர்.

N என்ற 37 வயதுமிக்க ஆடவருக்கு 18 ஆண்டுகள் சிறை மற்றும் 20 பிரம்படிகள் விதிக்கப்பட்டது. அந்த நால்வரில் திருமணம் ஆகாமல் தனியாக இருந்தவர் இவர்.

இந்த வழக்குகளுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஐந்தாவது நபர், J என்ற 41 வயது நபர். இவருக்கு மனைவி, நான்கு குழந்தைகள் உள்ளன. அவரது வழக்கு நிலுவையில் உள்ளது.

இதில் J என்ற அந்த நபர் தனது மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து, K, L, M, N ஆகிய நபர்களின் இச்சைக்கு விருந்தாக்கினார். அதே போல, k தன் மனைவியை J க்கு பலாத்காரம் செய்ய அனுமதி வழங்கினார் என சொல்லப்பட்டுள்ளது.

வெறும் $1 க்கு டிக்கெட் வாங்கி, $5.68மி Toto ஜாக்பாட் பரிசை தட்டிச் சென்ற அதிஷ்டசாலி நபர்