சிங்கப்பூரில் 25 வது மாடியில் இருந்து கீழே விழுந்த இளம் பெண் மரணம்

Woman, 26, dies

பேஷோர் சாலையில் உள்ள காண்டோமினியம் பிளாக்கின் 25 வது மாடியில் இருந்து விழுந்த இளம் பெண் இறந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

26 வயதுமிக்க அந்த பெண்ணை சோதித்ததில் அவர் இறந்தது சம்பவ இடத்திலேயே உறுதி செய்யப்பட்டது.

இந்திய ஊழியர்கள் உட்பட மூன்று வெளிநாட்டு ஊழியர்கள் மரணம்: உயிர்போக காரணமாக இருந்த 3 பேருக்கு சிறை

அவர் 25 வது மாடியில் இருந்து விழுந்ததாக வாசகர் கூறியதாக மதர்ஷிப் குறிப்பிட்டுள்ளது.

அவர் சீனப்பெண் என்றும் கூறப்படுகிறது.

செப். 7 அன்று மாலை 5 மணிக்கும் 6 மணிக்கும் இடையில் அவர் விழுந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

அன்று மாலை 6 மணியளவில் ஒருவர் உயரத்தில் இருந்து தவறி விழுந்தது குறித்து தகவல் கிடைத்ததாக போலீசார் உறுதி செய்தனர்.

இதில் சதிச்செயல் ஏதும் இல்லை என்று சந்தேகிக்கப்படுகிறது.

விசாரணை நடந்து வருகிறது.

சிங்கப்பூரில் ஆடவர் ஒருவருக்கு ஆறு பிரம்படிகள் விதித்து அதிரடி தீர்ப்பு