குடியிருப்பில் பாலியல் சேவை வழங்கியதாக 34 வயது பெண் கைது

woman-arrested-sexual-services
sex

பாலியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் 34 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

செராயா (Seraya) லேனில் உள்ள குடியிருப்பில் அவர் பாலியல் சேவைகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் புதிதாக 2,478 பேருக்கு தொற்று பாதிப்பு – மேலும் இருவர் மரணம்

நேற்று முன்தினம் செப்டம்பர் 29 அன்று அமலாக்க நடவடிக்கை அந்த இடத்தில் காவல்துறையால் நடத்தப்பட்டது. நேற்று செப். 30 காவல்துறை இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கையில், அந்த குடியிருப்பில் ஆணுறைப் பாக்கெட்டுகளும் கைப்பற்றப்பட்டன.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், பெண் அந்த குடியிருப்பில் பாலியல் சேவைகளை வழங்கியதாக கூறப்பட்டது, மேலும் மகளிர் சாசனத்தின்கீழ் குற்றம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை விசாரணைகள் நடந்து வருகின்றன.

கூடுதலாக, வாடகைதாரர் தங்கள் வீட்டில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை வீட்டு உரிமையாளர்கள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

மனைவியைக் கடத்திக் கொல்ல முயன்ற கணவருக்கு சிறை!