அப்பர் புக்கிட் திமா சாலையில் உள்ள காட்டுப் பகுதியில் 48 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அசைவில்லாமல் கிடந்தார்.
புக்கிட் பாடோக் நேச்சர் பார்க் அருகே உள்ள நிலத்தில் பெண் மீது ஒரு கான்கிரீட் ஸ்லாப் விழுந்ததாக நேற்று டிசம்பர் 21 அன்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
இனி இந்த ஊழியர்களுக்கு 7 நாள் PCR சோதனை முறை, N95 முகக்கவசம் மற்றும் பேஸ் ஷீல்டு கட்டாயம்
இந்நிலையில், அவரது உடலை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இறந்தவர் மெலிடா டோலா என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அடையாளம் கண்டுள்ளது.
கடந்த டிசம்பர் 19 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.42 மணியளவில் இயற்கைக்கு மாறான மரணம் குறித்து தகவல் கிடைத்ததாக ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த போலீசார் தெரிவித்தனர்.
மயக்கமடைந்த பெண் இங் டெங் போங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் இதில் ஏதும் சதி முறைகேடு நடந்ததாக சந்தேகம் இல்லை என போலீசார் தெரிவித்தனர்.
விசாரணைகள் நடந்து வருகின்றன.
Breaking: VTL விமான, பேருந்து புதிய டிக்கெட் விற்பனை நிறுத்தம்