நடைபாதை கூரையின் மீது விழுந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணம்

Sgsharetogether/FB

சிங்கப்பூரில், பிளாக் 34 Whampoa West-ல் உள்ள நடைபாதை கூரையின் மீது விழுந்த பெண் (33) ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக நேற்று ஜனவரி 14ஆம் தேதி மாலை 5:15 மணியளவில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக SCDF கூறியது.

சிங்கப்பூர் குடியிருப்புகளில் அதிக தொந்தரவு செய்யும் மூட்டை பூச்சிகளை ஒழிக்க எளிய வழிமுறைகள்..!

அதன் பின்னர், நடைபாதையின் கூரையிலிருந்து ஒருவரை மீட்டதாக SCDF கூறியது. பின்னர் அவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அந்த பெண், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது பாதி மயக்கத்தில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அதனை அடுத்து, சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என்பது உறுதி செய்யப்பட்டது.

விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளார்.

ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில், எந்தவொரு சதிச் செயலும் இதில் சந்தேகிக்கவில்லை என்றும் போலீசார் மதர்ஷிப்பிடம் தெரிவித்தனர்.

மனைவிக்கு போதைமருந்து கொடுத்து சக ஊழியருக்கு இரையாக்க கணவன் சதி – ஊழியருக்கு சிறை