உட்லண்ட்ஸ் ரயில் சோதனைச் சாவடியில் வந்து கொண்டிருந்த ரயிலில் இருந்து இறங்க முயன்ற பெண் ஒருவர் காயம் அடைந்தார்.
கடந்த ஜூலை 5 காலை அதிகாலை 5.30 மணியளவில் சிங்கப்பூர் சென்று கொண்டிருந்த ரயிலில் இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
அந்தப் பெண் ரயிலில் இருந்து இறங்க முயற்சி மேற்கொண்டதைக் கண்டதாக அதில் இருந்த ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்.
பேருந்து, லாரி உட்பட 4 வாகனங்கள் மோதி கடும் விபத்து: ஒருவர் மரணம் – லாரி ஓட்டுநர் கைது
அந்தப் பெண் ரயிலில் இருந்து அவசரமாக இறங்க விரும்பியதாகவும், எனவே ரயில் முழுமையாக நிற்பதற்கு முன்பே அவர் வெளியேறும் இடத்திலிருந்து குதித்ததாகவும் ஊழியர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் பிளாட்பாரத்திற்கும் ரயிலுக்கும் இடையில் தண்டவாளத்தில் விழுந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
இதனை அடுத்து மீட்கப்பட்ட அவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இதில் பெண்ணின் முழங்கால்கள் மற்றும் இடது முழங்கையில் காயங்கள் ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
ரயில் முழுமையாக நின்றால் மட்டுமே இறங்க வேண்டும் என்பதை ரயில் நிர்வாகம் வலியுறுத்தி கூறியுள்ளது.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்
ஸ்ரீ மன்மத காருணீஸ்வரர் கோவிலில் அன்னதானம் வாங்க சென்றபோது தகராறு.. ஆடவருக்கு சிறை