வெளிநாட்டு ஊழியர்களுக்கு தலா S$50 பணத்தை வழங்கிய முகம் காட்டாத பெண்மணி

woman gives 50 dollars foreign workers

அட்மிரால்ட்டியில் பெண்மணி ஒருவர் வெளிநாட்டு ஊழியர்களுக்கு S$50 பண நோட்டுகளை வழங்குவதைக் நாம் காணொளி மூலம் காண முடிந்தது.

அந்தப் பெண்மணி, காகித கவரில் இருந்து பணத்தை எடுத்து, சாலையில் அமர்ந்திருக்கும் ஊழியர்களுக்கு கொடுக்கும் காணொளி நேற்று (ஜூலை 27) வெளியாகியுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதி உட்பட புதிதாக 4 தொற்று குழுமங்கள்…

இந்த சம்பவம், Green Haven வெளியே 10 அட்மிரால்டி ரோடு ஈஸ்ட்டில் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சாலை ஓரத்தில் தரையில் அமர்ந்திருந்த ஊழியர்கள் அமைதியாக பணத்தை பெறுவதையும் காணொளி மூலம் காணமுடிகிறது.

அந்த பெண்மணி யார் என்ற அடையாளம் குறிப்பிடப்படவில்லை, அதே போல அவர் ஏன் பணத்தை வழங்கினார் என்ற விளக்கமும் குறிப்பிடப்படவில்லை.

டெலிகிராம் குழு மூலம் ஆபாச காணொளி, புகைப்படங்கள் பரிமாற்றம் – 4 பேர் மீது குற்றச்சாட்டு