பாசிர் ரிஸில், ஏழு வாகனங்கள் சம்பந்தப்பட்ட மோசமான விபத்து நேற்று வியாழக்கிழமை (ஜூன் 25) ஏற்பட்டது.
இதில் 57 வயது கார் ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 சர்க்யூட் பிரேக்கர் நடவடிக்கையின் போது ஒன்றுகூடிய 7 வெளிநாட்டவர்களுக்கு அபராதம்..!
அன்று காலை 11.25 மணியளவில் பாசிர் ரிஸ் டிரைவ் 8 மற்றும் பாசிர் ரிஸ் டிரைவ் 1 சந்திப்பில் இந்த விபத்து ஏற்பட்டது.
டாக்ஸி, மோட்டார் சைக்கிள், ஒரு லாரி மற்றும் நான்கு கார்கள் மோதிய விபத்து குறித்து தகவல் கிடைத்தாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.
Aiyo drive safe people
Posted by Alvin Teo on Wednesday, June 24, 2020
சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது பெண் கார் ஓட்டுநருக்கு சுயநினைவு ஏற்பட்டது.
விபத்து நடந்த காட்சியின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பலர் பகிர்ந்து கொண்டனர். ஒரு சிவப்பு கார் மற்றும் ஒரு நீல நிற கார் கவிழ்ந்து கிடப்பதை காணலாம்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : 7 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட வெளிநாட்டவருக்கு சிறை மற்றும் பிரம்படி..!