46 வயது நபர் தனது மகளைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததற்காக, அவருக்கு 29 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 24 பிரம்படிகளைத் தண்டனையாக விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
சிங்கப்பூரில் கடந்த 2010- ஆம் ஆண்டு, சிறுமி, அவரது பெற்றோர், மூத்த சகோதரர், தங்கை மற்றும் ஒரு வீட்டுப் பணியாளர் ஆகியோர் யிஷூனில் ஒரு பிளாட்டின் ஒரு அறையில் ஒன்றாகத் தூங்கினர். எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, 46 வயதான தந்தை தனது மகளிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டார். மேலும், இது குறித்து யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று கூறினார்.
இதுபோன்று தொடர்ந்து சிறுமியை அவரது தந்தை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து, சிறுமி கடந்த 2017- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது தாயிடம் கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் சிறுமியின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
ஒலிம்பிக் போட்டியையொட்டி சிறப்பு அஞ்சல் தலைகளை வெளியிடுகிறது சிங்கப்பூர் அஞ்சல் துறை!
மேலும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று (21/07/2021) நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது தனது சொந்த மகள் என்று பார்க்காமல் சிறுமியை 10 வயது முதல் 14 வயது வரை ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தொடர்பாக 14 பாலியல் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.
சிறுமி தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர்கள், “பாலியல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு சிறுமி பலமுறை தனது தந்தையிடம் கூறிய போதிலும், குற்றம் சாட்டப்பட்டவர் பாலியல் வன்கொடுமையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்” என்று தெரிவித்தனர்.
அப்போது, சிறுமியின் தந்தை தான் செய்ய குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவருக்கு 29 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 26 பிரம்படிகள் தண்டனையாக விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது 20 வயதாகும் நிலையில், அவரது பெயரை முடியாது என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.