உட்லண்ட்ஸ் அவென்யூ 5இல் கடந்த நவம்பர் 20, அன்று நடந்த விபத்தில் தாய் மற்றும் மகள் மீது கார் மோதியது.
பின்னர் இரண்டு நாட்களுக்குப் பிறகு, நவம்பர் 22 அன்று அதே சந்திப்பில் வயதான பெண்மணி மீதும் கார் மோதியது.
அந்த இரண்டு விபத்துகளும் காலை 11 மணிக்குள் நடந்தன என்பதை ஷின் மின் டெய்லி நியூஸ் குறிப்பிட்டுள்ளது.
தாய் மற்றும் பள்ளிச் சீருடையில் இருந்த அவரது மகள் சம்பந்தப்பட்ட விபத்தில் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இருவரின் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டகாகவும், பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இரண்டாம் விபத்து தொடர்பான காணொளியும் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
ஒரே இடத்தில் கிட்ட தட்ட ஒரே நேரத்தில் இரண்டு விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.