சிங்கப்பூரில் கடந்த ஆண்டு 37 வேலையிட இறப்புகள் பதிவாகியுள்ளன, 2019ஆம் ஆண்டில் 39 இறப்புகள் பதிவானது.
இருப்பினும், 2020 ஆம் ஆண்டில் 30 இறப்புகள் மட்டுமே பதிவானது, அப்போது தொற்றுநோய் காரணமாக வேலை செய்வதில் இடையூறுகள் அதிகம் ஏற்பட்டன.
மனிதவள அமைச்சகம் (MOM) வேலையிடத்தை பாதுகாப்பானதாக மாற்ற நிறுவனங்களின் மீதான கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளது, மேலும் ஊழியர்களுக்கான பயிற்சியையும் மேம்படுத்ததியுள்ளது.
2019 மற்றும் கடந்த ஆண்டு இறப்புகளின் எண்ணிக்கை 100,000 ஊழியர்களுக்கு 1.1 என்ற விகிதமாக உள்ளது.
இதனை, 2028க்குள் 100,000 ஊழியர்களுக்கு விகித அடிப்படையில் ஒன்றுக்கு கீழே கொண்டுவருவதே சிங்கப்பூரின் இலக்கு.
பணியிட பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்த வருடாந்திர புள்ளிவிவரங்களை இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 29) MOM வெளியிட்டது.