வெளிநாட்டு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… வேலையிடங்களில் புதிய நடவடிக்கைகள்

வேலை தேடும்போதும், வேலையிடத்திலும் காட்டப்படும் பாகுபாடு - சிங்கப்பூரில் குறைவாக பதிவு
Photo: REUTERS

சிங்கப்பூர் வேலையிடங்களில் உயர் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் நடப்புக்கு வந்தது.

அந்த நடைமுறை காலம் மே 31 ஆம் தேதியுடன் முடிவடையும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

ஆனாலும் கூட சில நிபந்தனை தேவைகள் தொடர்ந்து நடப்பில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் 2024 ஆம் ஆண்டின் நீண்ட விடுமுறைகள் வெளியீடு – ஊழியர்கள் என்ஜாய்

மேலும், நிலையான வேலையிட உயர் பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளை உருவாக்க புதிய நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு வேலையிடங்களில் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்த பிறகு இந்த உயர் பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு மட்டும் வேலையிடங்களில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 46 என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு பிப். மாதம் அந்த பாதுகாப்பு காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது.

இதன் பாதுகாப்பு காலம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து 100,000 ஊழியர்களுக்கும் 0.8 என்ற அளவில் மரணங்கள் குறைந்துள்ளது.

Singapore Pools கடையில் டிக்கெட் வாங்க சென்றவருக்கு அடி.. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம்