உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க, இந்தியா சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது.
சிங்கப்பூரிலிருந்தும் ஜூன் 09ஆம் தேதி முதல் தமிழகத்திற்கு 15 விமானங்கள் இயக்கப்பட உள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு வெளிநாட்டில் இருந்து இந்தியா செல்லும் வந்தே பாரத் திட்டத்தின் விமான கால அட்டவணைகள் மற்றும் அனைத்து விவரங்களையும் மின்னஞ்சல் மூலம் அந்தந்த நாட்டு இந்திய தூதரகங்கள் பயணிகளுக்கு வழங்கி வருகிறது.
தற்போது வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சிங்கப்பூரில் இருந்து தமிழகம் செல்லும் விமானங்களில் கட்டண விவரங்கள் மற்றும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகத்தின் இணையதளத்தை பார்க்கவும். https://www.hcisingapore.gov.in/