சிங்கப்பூரில் புதிதாக நோய்த்தொற்று பாதித்தவர்களில் ஒருவர் இதயக் கோளாறு காரணமாக உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
சம்பவம் 45227 என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், 69 வயதான சிங்கப்பூரர். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று உயிரிழந்தார்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் 90,000 வெளிநாட்டு ஊழியர்கள் வேலைக்கு திரும்பியுள்ளனர்..!
அவர் வீட்டில் சுயநினைவின்றி காணப்பட்டதாகவும், மேலும் செங்காங் பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து, அதே நாளில் அவருக்கு COVID-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், ஹைப்பர்லிபிடீமியா, ஹைப்போ தைராய்டிசம் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் போன்றவை இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் அடுத்த 12 மாதங்களுக்கு அதிகமானோர் வேலை இழக்க நேரிடலாம் – சான் சுன் சிங்..!