வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்களில் குறைந்தது 90,000 பேர் தங்களுடைய வேலைக்கு திரும்பிவிட்டதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
நேற்றைய முன்தினம் நிலவரப்படி, சுமார் 180,000 ஊழியர்கள் குணமடைந்துள்ளனர் அல்லது கொரோனா தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக MOM செய்திக்குறிப்பில் தெரிவித்தது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் அடுத்த 12 மாதங்களுக்கு அதிகமானோர் வேலை இழக்க நேரிடலாம் – சான் சுன் சிங்..!
ஒரு வாரத்திற்கு முன்பு சுமார் 87,000ஆக இருந்த அந்த எண்ணிக்கையானது, தற்போது இரு மடங்கு உயர்ந்துள்ளது.
அந்த ஊழியர்களில் குறைந்தது 90,000 பேர் தற்போது வேலைக்குத் திரும்பியுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீதமுள்ளோரின் வேலையிடங்களில் பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் இன்னும் அமல்படுத்த வேண்டியுள்ளதால் அவர்கள் வேலைக்குச் செல்லவில்லை என்றும் வோங் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளை முதல் சம்பவம் உறுதி செய்யப்பட்டபோதே மூடியிருக்க வேண்டும் – டான் செங் போக்..!