சிங்கப்பூரில் தனது வீட்டில் இறந்து கிடந்த இளம்பெண் – காவல்துறை விசாரணை..!

25-year-old Malaysian woman found dead in Punggol flat
25-year-old Malaysian woman found dead in Punggol flat (PHOTO: Google Maps)

சிங்கப்பூரில் 25 வயதான மலேசிய பெண் ஒருவர் தனது பொங்கோல் பிளாட்டில் இறந்து கிடந்தார் என்று Lianhe Wanbao தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் பொங்கோல் சென்ட்ரலின் பிளாக் 622B இல் நடந்துள்ளது. மேலும், பெண்ணின் இறப்புக்கான காரணம் குறித்து தற்போது தெரியவில்லை.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் துப்புரவு ஊழியர் மீது உணவுத் தட்டை வீசியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் மீது குற்றச்சாட்டு..!

Wanbao தகவலின்படி, அவர் சிங்கப்பூரில் ஒரு பயண நிறுவனத்தில் பணிபுரிந்தார் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், அவர் பொங்கோல் யூனிட்டில் ஒரு வாடகை அறையில் தனியாக வசித்து வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Wanbao-வின் கேள்விகளுக்கு பதிலளித்த காவல்துறை, மாலை 4:49 மணிக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தாக தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் அந்த பெண் அசைவின்றிக் காணப்பட்டார். பின்னர் அவர் மருத்துவ ஊழியர்களால் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க : வேலை அனுமதி உடைய பயணிகள் உட்பட… மின்னணு கண்காணிப்பு சாதனத்தை அணிய வேண்டும்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg