சிறப்புப் பயண ஏற்பாட்டுத் திட்டத்தில் இவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்!

Singapore
(Photo: TODAY)

சிங்கப்பூரில் பணிபுரியும் நிரந்தரவாசிகளான (PR) மலேசியர்கள் PCA எனும் சிறப்புப் பயண ஏற்பாட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின் கீழ் பயணிப்பதற்கான விண்ணப்பங்கள் இன்று (ஜன. 11) முதல் துவங்கும் என்று மலேசிய தூதரகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் தீப்பற்றி எரிந்த கார்… காணொளி!

சிங்கப்பூரின் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) அதன் SafeTravel தளத்தில் இந்த திட்டத்தின் விவரங்களை புதுப்பித்துள்ளது.

சிங்கப்பூரில் குறைந்தது 90 நாட்களுக்கு தொடர்ந்து பணிபுரிந்த பின்னர், குறுகிய கால விடுப்புக்கு விண்ணப்பிக்க அதிகமான மலேசியர்களை அனுமதிக்கும் என்று தூதரகம் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, நீண்டகால குடிநுழைவு அனுமதி வைத்திருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் மலேசியர்களுக்கும் மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் பயணம் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் TPE சாலை அருகே கடந்த 8 நாட்களில் இரண்டாவது நிலச்சரிவு

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…