தமிழ் மொழியின் பெருமைகளை உலகிற்கு பறைசாற்றும் விதமாகவும், அதனை போற்றும் வகையிலும் “தமிழை நேசிப்போம்” என்ற பாடல் சிங்கப்பூரில் வெளியாகியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக, ஏப்ரல் மாதத்தில் தமிழ் மொழி விழா சிங்கப்பூரில் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உள்ளாடைகளை தொடர்ந்து திருடிவந்த ஆடவர்… போலீசிடம் பிடிபட்டார்!
ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க, சிங்கப்பூர் கிளை தலைவர், முனைவர் மு. அ. காதர் அவர்கள் “தமிழை நேசிப்போம்” என்ற இந்த சிறப்புமிக்க பாடலை இயற்றியுள்ளார்.
இப்பாடல் நேற்று இணையம் வழியாக வெளியிடப்பட்டது. சிங்கப்பூரின் இசைக்கலைஞர் பாடகர் “இசை மணி” திரு பரசு கல்யாண் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
முதன்முறையாக 18 பாடகர்கள் ஒன்றிணைந்து இப்பாடலை உருவாக்கியுள்ளனர்.