உள்ளாடைகளை தொடர்ந்து திருடிவந்த ஆடவர்… போலீசிடம் பிடிபட்டார்!

Man arrested allegedly stealing undergarments
(Photo: Singapore Police Force)

தொடர் உள்ளாடைகள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 47 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி அதிகாலை 6.20 மணியளவில், மவுண்ட்பேட்டனில் உள்ள ஜலான் பாதுவில் அவரது வீட்டுக்கு வெளியே தொங்கவிடப்பட்டிருந்த உள்ளாடைகள் திருடப்பட்டதாக பெண் ஒருவர் காவல்துறையிடம் புகார் தெரிவித்தார்.

தைவானில் ரயில் தடம் புரண்ட விபத்தில் 48 பேர் மரணம் – சிங்கப்பூர் ஆழ்ந்த இரங்கல்

அதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் கேமராக்களின் உதவியுடன், பெடோக் காவல் பிரிவின் அதிகாரிகள் அந்த ஆடவரின் அடையாளத்தை கண்டறிந்தனர்.

அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடவர் மேலும் பிற வழக்குகளில் தொடர்புடையவர் என்று நம்பப்படுகிறது.

அவரிடம் 60க்கும் மேற்பட்ட உள்ளாடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூர் பயணிகள் விமானத்திற்கு தடை விதித்த நகரம்