சிங்கப்பூரில் ஆடவர் ஒருவர், மயக்க நிலையில் இருந்த மனைவியியை சக ஊழியருக்கு இரையாக்கும் சதியில் ஈடுபட்டுள்ளார்.
அவருடன் சேர்ந்து கூட்டுச் சதியில் ஈடுபட்ட 47 வயதான ஆடவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், ஜனவரி 13 அன்று அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கத்திக்குத்து தாக்குதல்: 9 மணிநேரத்துக்குள் சம்பந்தப்பட்ட இருவரை கைது செய்து அதிரடி காட்டிய போலீஸ்
கற்பழிப்புக்கு சதி செய்த குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் பெண்ணை மானபங்கம் செய்த குற்றத்திற்காக மீதமுள்ள குற்றச்சாட்டு கருத்தில் கொள்ளப்பட்டது.
48 வயதான அந்த பெண்ணுக்கு திருமணமாகி 28 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு பள்ளி செல்லும் வயதில் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில் கணவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
மனைவியை தூங்க வைப்பதற்காக ஆல்கஹால் மற்றும் அறியப்படாத போதைப்பொருளை கணவர் கொடுத்துள்ளார், அது ஒரு பாலியல் தொடர்பான மருந்தாகும்.
மனைவியின் கண்களை கட்டிய நிலையில், ஆடையின்றி அவரை கணவன் வைத்திருத்தாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
அந்த பெண்ணின் கணவன் இதுகுறித்த குற்றத்தை விரைவில் ஒப்புக்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா செல்லும் பயணிகள் கவனத்திற்கு!! – தெரிந்துகொள்ள வேண்டிய தற்போதைய கட்டுப்பாடுகள்