உக்ரைனில் தற்போதுள்ள சிங்கப்பூரர்கள் விரைவில் நாட்டை விட்டு வெளியேறுமாறு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
ரஷ்யாவுடன் அந்நாட்டில் அதிகரித்து வரும் பதட்டங்களை கருத்தில் கொண்டு அமைச்சகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரில் பிப். 14 முதல் தடுப்பூசி தகுதியை தக்க வைத்துக்கொள்ள அலைமோதும் கூட்டம்…!
அதே போல, உதவி தேவைப்படும் சிங்கப்பூரர்கள் MFA duty office அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
“அங்கே மோதல் ஏற்பட்டால், சிங்கப்பூரர்கள் வெளியேறுவதற்கு உதவக்கூடிய நிலையில் MFA இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.”
மேலும், சிங்கப்பூருக்கு உக்ரைனில் தூதரகம் ஏதும் இல்லை என்பதையும் MFA சுட்டிக்காட்டியது.
சிங்கப்பூர் மட்டுமல்லாமல், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் போன்ற பிற நாடுகளும் இதே போன்ற ஆலோசனைகளை வழங்கியுள்ளன.
சிங்கப்பூரில் தீவு முழுவதும் பொது எச்சரிக்கை ஒலி – பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்