சிங்கப்பூர் செல்லும் தமிழகத்தின் மதுரை சுற்றுவட்டார பகுதி பயணிகளுக்கு இன்பச்செய்தி வெளியாகியுள்ளது.
மதுரை – சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இன்று முதல் (மார்ச் 29) விமான சேவையைத் தொடங்குகிறது.
இது Non- VTL எனப்படும் VTL ஏற்பாடு அல்லாத விமான சேவை ஆகும். மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் IX 684 என்ற விமானமும், சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு IX 683 என்ற விமானமும் இயக்கப்படுகிறது.
இந்த விமானம் சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு மாலை 6:40க்கு மணிக்கு மதுரை வந்து சேரும்.
அதே போல, மதுரையிலிருந்து இரவு 9:35 மணிக்கு புறப்பட்டு சிங்கப்பூருக்கு அதிகாலை 4:30 மணிக்கு சென்றடையும்.
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கும் வரும் பயணிகள், “கட்டாயம்” சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என பயணிகளை அறிவுறுத்தியுள்ளது விமான நிறுவனம்.